• About
    • தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் சிந்தனை

      எமது மக்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது,அதனின்றும் மக்களை விடுவித்து எமதுமக்களின்,சுதந்திரத்தையும்,பாதுகாப்பையும் நிலைநாட்டும் வரை, நாம் ஆயுதம் ஏந்திப் போராடுவதைக் கைவிடமாட்டோம்.

    • TAMIL CHATROOM

      உலக தமிழ் நெஞ்சங்களுக்கு ஒரு விளக்கம்: ஒரு இணையத்தளம் TAMILDHESAMCHAT.COM என்கின்ற நம்பகமான ஒரு பொழுது போக்கு தளம்.

    • tamilkadalai.com

      Tamil Movies,Gallery,tamilchat, tamil chat,Tamil Serials, movie, music,cinema, video, mp3, songs,new, Dvd, vcd, News, serials, dvd-r,Video Club,Tamil Chatl.

    • தமிழீழதேசிய அடையாளம்

      தமிழீழதேசிய அடையாளம்.

    செய்திகள்,கட்டுரைகளை அனுப்ப தொடர்புகளுக்கு
    ஸ்கைப் =TAMILJANCY MAIL=kesavaneelam@hotmail.com

    Wednesday, August 24, 2011

    0

    நாவாந்துறை இராணுவ முகாமை `பொங்குதமிழ்` பாணியில் தாக்க முயற்சி


    நாவாந்துறை இராணுவ முகாமையும், காவல்துறை நிலைகளையும் தாக்க முயன்ற போதே 102 பேரைத் தாம் கைது செய்ததாக சிறிலங்கா படைகளின் யாழ்ப்பாணத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.
    நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளார்.

    படையினரை குவித்து யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக கூறிய அவர், காவல்துறைக்கு உதவியாக அந்தப் பகுதியில் கால்நடை மற்றும் வாகன ரோந்துகளை அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

    அதேவேளை, கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு செவ்வி அளித்துள்ள மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க, இதனை பொங்கு தமிழ் பாணியிலான தாக்குதல் என்று வர்ணித்துள்ளார்.

    நாவாந்துறை இராணுவ முகாமுக்குள் பொல்லுகள், துவிச்சக்கரவண்டி சங்கிலிகள், வாள்களுடன் நுழைந்து படையினரைத் தாக்க முற்பட்ட போதே பொதுமக்களை கைது செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

    இதன் பின்னணியில் அரசியல்வாதிகள் சிலர் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

    அதேவேளை, நாவாந்துறையில் சிறிலங்காப் படையினரே பொல்லுகள், துவிச்சக்கரவண்டி சங்கிலிகள், போன்றவற்றினால் தம்மைத் தாக்கியதாக, படையினரால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் தெரிவித்துள்ளனர்.

    சிறிலங்கா படையினரால் இராணுவ முகாமிலும், காவல்நிலையத்திலும் வைத்து தாக்கப்பட்ட 27  பொதுமக்கள் பலத்த காயங்களுடன் யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Sunday, August 21, 2011

    0

    neduntheevunews: மாந்தீரீகர்களுக்கு அரசு எச்சரிக்கை! ஜனாதிபதி திண்ட...


    neduntheevunews: மாந்தீரீகர்களுக்கு அரசு எச்சரிக்கை! ஜனாதிபதி திண்ட...: மாந்தீரீக கொள்கைகளை கொண்டு பிழைப்பவர்களுக்கு எதிராக, எதிர்காலத்தில் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது...
    0

    மாந்தீரீகர்களுக்கு அரசு எச்சரிக்கை! ஜனாதிபதி திண்டாட்டம்?




    மாந்தீரீக கொள்கைகளை கொண்டு பிழைப்பவர்களுக்கு எதிராக, எதிர்காலத்தில் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்த எச்சரிக்கையை சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பொரேரா விடுத்துள்ளார்.

    தமது அமைச்சுக்கு இது தொடர்பான சட்ட ரீதியான பின்னணி ஒன்று இல்லாத போதிலும், பாதுகாப்பு அமைச்சின் ஊடக அமைச்சரவை பிரேரணை ஒன்றை தாக்கல் செய்ய உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

    இதனூடாக மாந்தீரீகம் தொடர்புடையவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

    இதனிடையே, மாந்தீரீக கொள்கைகள் மூலம் மக்களை அடிமைப்படுத்தி பணம் வசூலிப்பது தொடர்பிலும் தமக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அமைச்சர் பீலிக்ஸ் பொரேரா குறிப்பிட்டுள்ளார்.
    0

    neduntheevunews: கணவனைப் பார்க்கச் செல்லும் மனைவியரை உறவுக்கு வற்பு...


    neduntheevunews: கணவனைப் பார்க்கச் செல்லும் மனைவியரை உறவுக்கு வற்பு...: அல்ஜசீரா இலங்கையில் தமிழர்களின் கலை கலாசராம், அவற்றின் இன்றைய சீர்கேடுகள், அவற்றுக்கான காரணங்கள் பற்றிய ...
    0

    கணவனைப் பார்க்கச் செல்லும் மனைவியரை உறவுக்கு வற்புறுத்தும் படையினர்! (காணொளி இணைப்பு)




    அல்ஜசீரா இலங்கையில் தமிழர்களின் கலை கலாசராம், அவற்றின் இன்றைய சீர்கேடுகள், அவற்றுக்கான காரணங்கள் பற்றிய ஒரு காணொளி ஒன்றை இலங்கையின் விதவைகள் எனும் பெயரில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பியிருந்தது.

    அதில், கணவன்மார்களை சிறையில் சென்று பார்க்கும் பெண்கள் தொடர்பாக அவர்களில் ஒருவரிடம் கேட்டறிந்தது அல்ஜசீரா. அதில் அப்பெண் தனது கணவனை சிறையில் பார்க்க செல்லும் போது, “உனது கணவருடன் கதைக்க வேண்டுமென்றால் என்னுடன் ஒரு தடவை உறவு கொள்ளவேண்டும்” என இராணுவ அதிகாரிகள் தன்னை கஸ்டப்படுத்தியதாக கிளி நொச்சியில் வாழும் அப்பெண் கூறியுள்ளார்.

    இது எனக்கு மட்டுமல்ல எல்லா பெண்களும் எதிர்கொள்கின்ற பிரச்சினைதான். நாம் எமது துணைவர்களைத்தேடி சிறைச்சாலைகளுக்கும், இராணுவ முகாம்களுக்கும் செல்கின்றோம். அங்கு படையினர் தம்முடன் உறவு வைத்துக்கொண்டால் எமது கணவன்மாரை பார்க்க முடியும் என வற்புறுத்துவர் என கூறியுள்ளார்.



    தமிழ் மக்களின் கலாச்சாரம் மற்றும் கட்டுப்பாடான பண்பாடுகள் பற்றி கூறும் அல்ஜசீரா செய்தியாளர் அங்கு நடக்கும் சீர்கேடுகள் தொடர்பாக யாழ் அரச அதிபரை சந்தித்து வினாவுகின்றார்.

    அதற்கு யாழ் அரச அதிபர் இமெல்டா, இச் சமூதாயச் சீர்கேடுகளுக்கு படையினர் மட்டும் காரணமல்ல என அவர் கூறிய கருத்தினை அல்ஜசீரா சுட்டிக்காட்டியுள்ளது.

    இவ்வாறு தமிழ் மக்களின் கலாசார சீரழிவுகளுக்கு படையினர் காரணமல்ல என தெரிவித்து படையினரைக் காப்பாற்ற முனைந்ததன் மூலம் யாழ் கட்டளைத் தளபதி மீது தாம் கொண்ட அன்பினை மீண்டும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
    0

    ஒபாமா ஒரு இந்திய அரசியல்வாதியாக இருந்திருந்தால்....( படங்கள் இணைப்பு )


    அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஒரு...... இந்திய அரசியவாதியாக இருந்திருப்பாரானால் எப்படி காட்சி கொடுத்து இருப்பார் என்பதை காட்டுகின்ற படங்கள் இவை.

    Wednesday, August 10, 2011

    0

    கொடுத்து வைத்த யப்பான் ஆண்கள்! ( படங்கள், வீடியோ இணைப்பு )



    காதலியின் மடியில் தூங்குகின்ற அனுபவத்தை புதுமையான தலையணை மூலம் யப்பானிய ஆண்கள் பெறுகின்றனர். மடித் தலையணைகள் என்று இவ்வகைத் தலையணைகள் அழைக்கப்படுகின்றன.
    இவை 2004 ஆம் ஆண்டு அறிமுகம் ஆகின. அன்று முதல் இன்று வரை ஆண்களின் விருப்பத்துக்கு உரிய தெரிவுகளாக விளங்கி வருகின்றன. இவற்றின் விலை தலா 90 அமெரிக்க டொலர் வரை.